தமிழ்நாடு மின்சார வாரியம் சரவெடி.. கரண்ட் பில்லில் சூப்பர் அதிரடி

x

தமிழ்நாடு மின்வாரியத்தில் மின் ஆற்றல் சேமிப்பில் பல்வேறு முன்னெடுப்புகள் காரணமாக வருடத்திற்கு சுமார் 15 லட்சம் வரை மின் கட்டணம் சேமிக்கப்படுகிறது.

மின்வாரிய தலைமை வளாகத்தில் மின் தொடரமைப்பு கழக கட்டடத்தில் சோதனை முறையாக "நவீன தானியங்கி அசைவு கண்டறிதல் சென்சார்" மூலமாக வளாகத்தின் 12 பொது பயன்பாட்டு இடங்களில் பொருத்தப்பட்டு ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் ஒளிரும் மின் விளக்குகள் தானாகவே அணைக்கப்பட்டு மீண்டும் ஆள் நடமாட்டம் கண்டறியும் போது தானாகவே ஒளிரும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது... மேலும் இதே போல் ஒரு கலையரங்கம் மற்றும் 3 கலந்தாய்வு கூடங்களில் ஒருங்கிணைந்த மின் குளிரூட்டி சாதனங்களில் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு ஆளில்லாத நேரங்களில் குளிர்சாதன வசதிகள் துண்டிக்கப்படுகிறது. இதன் மூலம் தினசரி நாளொன்றுக்கு சுமார் 500 யூனிட் மின்சாரம் சேமிக்கப்பட்டு வருடத்திற்கு ரூபாய் 15 லட்சம் மின் கட்டணம் சேமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்