"குழந்தை இல்லாத விரக்தி" 21 வயது இளம் பெண் எடுத்த விபரீத முடிவு

x

திருவண்ணா மலை மாவட்டம் போளூரில் குழந்தையில்லாத விரக்தியில், இளம் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போளூர் அடுத்த விளாப்பாக்கத்தை சேர்ந்த தம்பதி சீனிவாசன் - சந்தியா. இருவருக்குமிடையே குழந்தையின்மையால் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தியா, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமணமாகி நான்கு ஆண்டுகளேயான நிலையில், 21 வயது இளம் பெண் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்