வீட்டில் உடல் சிதறி பலி.. VAO போட்ட அதிரடி உத்தரவு

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீட்டில் வெடி தயாரிக்க வைத்திருந்த வெடி வெடித்து ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கொக்குகுளம் கிராமத்தில் சதீஸ்வரன் என்பவர் வெடி தயாரிப்பதற்காக அனுமதியின்றி வெடி மருந்துகளை வீட்டில் பதுக்கி வைத்துள்ளார். அந்த வெடி மருந்துகள் அனைத்தும் திடீரென வெடித்ததால் சதீஸ்வரன் உடல் சிதறி பலியானார்... அவருடைய மனைவி லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன... இச்சம்பவம் தொடர்பாக ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியருக்கு முறையான தகவல் அளிக்காத சாயமலை கிராம நிர்வாக அலுவலர் சந்தனபூபதி, கிராம நிர்வாக உதவியாளர் மாரியப்பன் ஆகிய இருவரையும்யும் ஆட்சியர் பரிந்துரையின் பெயரில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.... இதனால் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்