போலீஸ் காட்டிய கோர முகம்..நொடியில் பிரிந்த விவசாயி உயிர்..கொதித்தெழுந்த மக்கள் போராட்டம்

x

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ராசியங்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயக்கூலியான வீரையன், சில தினங்களுக்கு முன், மதுவிலக்கு காவலர் குணசீலன் என்பவரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில், போராட்டத்தை வாபஸ் பெற்று, வீரையனின் உடலை அடக்கம் செய்தனர். இந்நிலையில், இதுநாள் வரை குணசீலன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியும், நாட்டுச்சாலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு தவறான சிகிச்சையால் குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்ததாக புகார் தெரிவித்தும், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்