பழைய நீதிமன்றத்துக்கு சீல் களத்தில் இறங்கிய நீதிபதி |Vilupuram
திண்டிவனம் பழைய நீதிமன்ற கட்டிடங்களில், வழக்கறிஞர்கள் சிலர் அத்துமீறி நுழைந்து, குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. அதன் பேரில், திண்டிவனம் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, கடந்த 5-ஆம் தேதி பழைய நீதிமன்றம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட பழைய நீதிமன்ற வளாகத்தை நீதிபதி ரகுமான் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.....
Next Story