கேள்வி கேட்டதைத் தொடர்ந்து ரூ.47 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்த பறக்கும் படை

x

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, 47 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்த‌தால், பொதுமக்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்ட‌னர். கோம்புபள்ளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட பறக்கும் படையினர், காரில் வந்த‌வரிடம் 47 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மருத்துவ சிகிச்சைக்காக எடுத்துச் செல்வதாக கூறியும், பணத்தை தராத‌தால், 47ஆயிரம் ரூபாயை ஏன் பறிமுதல் செய்கிறீர்கள்? என்றும் வட்டாட்சியர் மாரிமுத்துவிடம் பொதுமக்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் திருப்பிக் கொடுத்தனர். அதிகாரியிடம் பொதுமக்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்