மாதுளம் பழம் பறித்த சிறுவர்கள் காலில் சூடு வைத்த வீட்டு ஓனர்.. குமரியில் அதிர்ச்சி சம்பவம்..

x

கன்னியாகுமரியில், வீட்டிற்குள் நுழைந்து மாதுளம் பழம் பறித்த சிறுவர்களை... வீட்டின் உரிமையாளர் கட்டி வைத்து காலில் சூடு வைத்தாக சிறுவர்களின் தாய் போலீசில் புகாரளித்துள்ளார். கொல்லங்கோடு அருகே வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஷைஜி. இவரது மகன்கள் இருவரும் அதேபகுதியை சேர்ந்த கலா என்பவரது வீட்டிற்குள் நுழைந்து மாதுளம் பழம் பறித்தாக கூறப்படுகிறது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் கலா, சிறுவர்கள் இருவரையும் வீட்டிற்குள் கட்டி வைத்து காலில் சூடு வைத்தாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த சிறுவர்கள் இருவரையும் மீட்டு அவரது தாய் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இது குறித்து போலீசில் புகராளித்தும், நடவடிக்கை ஏதும் எடுக்காமல் போலீசார் இழுத்தடித்து வருவதாக கூறி குற்றம் சுமத்தினார்.https://youtu.be/OrylDPZm-ho


Next Story

மேலும் செய்திகள்