தென்காசி அருகே அதிர்ச்சி.. சட்டக்கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. "அவங்க தான் காரணம்"..

x

சங்கரன் கோவில் அருகே சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில், கல்லூரி நிர்வாகம்தான் காரணம் எனக்கூறி மாணவர்கள் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டம் சங்கரன் கோயில் அருகேயுள்ள வாசுதேவநல்லூரில் தனியார் சட்டக்கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு படித்து வரும் மாணவி ஒருவரை, அவரது தனிப்பட்ட நடவடிக்கையை சுட்டிக்காட்டி கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்குள் வர தடை விதித்ததாக கூறப்படுகிறது. மேலும், அம்மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் கட்டாய விடுப்பு வழங்கியதாகவும் கூறப்படும் நிலையில், மன உளைச்சளில் இருந்த மாணவி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து தற்கொலை முயற்சிக்கு முன் மாணவி பேசி வெளியிட்ட ஆடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்