அடுத்த 48 மணி நேரம் - வானிலை மையம் வைத்த செக்!

x

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில், வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வரும் 27-ஆம் தேதி வரை, இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு 28 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 43 டிகிரி செல்சியஸ் வெயில் வாட்டி வதைத்ததாகவும், வெப்ப அலை வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்