ஆலடி அருணாவின் 90வது பிறந்தநாளையொட்டி மாநில அளவிலான செஸ் போட்டி - ஆர்வத்துடன் கலந்து கொண்ட வீரர்கள்

x

ஆலடி அருணாவின் 90வது பிறந்தநாளையொட்டி மாநில அளவிலான செஸ் போட்டி - ஆர்வத்துடன் கலந்து கொண்ட வீரர்கள்

மறைந்த முன்னாள் சட்டத் துறை அமைச்சர் ஆலடி அருணாவின் 90 வது பிறந்தநாள் விழாவையொட்டி நடந்த இந்த மாநில அளவிலான செஸ் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். திமுக மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா போட்டிகளைத் துவக்கி வைத்தார். வயது அடிப்படையிலும், அனைத்து வயதினருக்கும் பொதுவாகவும் தனித்தனியாக 7 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்