#BREAKING || ஒரே நாளில் 23 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

x

ராமேஸ்வரம் செய்தியாளர் விஸ்வநாதன்

இரண்டு விசைப்படகு 23 மீனவர்கள் கைது செய்த இலங்கை கடற்படை; கவலையில் மீனவர்கள்

தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்று இலங்கையை காங்கேசன் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகையும் அதிலிருந்து 23 மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக காங்கேசன் கடற்கரை முகாமிற்கு அழைத்து செல்ல உள்ளனர்

மேலும் தொடர்ச்சியாக இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்யப்பட்டு வருவதனால் மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் ராமேஸ்வரம் பகுதியில் சேர்ந்தவர்கள் என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்