கடையின் மேற்கூரையை உடைத்து பால்கோவா, பாதாம் பாலை திருடி சென்ற திருடர்கள்

x

சிவகாசியில்... ஆவின் பாலகத்தின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த கும்பல், சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள நெய் பாட்டில்கள் மற்றும் பால்கோவோ பாக்கெட்டுகளை திருடிச் சென்றனர். சிவகாசி கந்தபுர காலனியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் நடத்தி வந்த ஆவின் பாலகத்தில் இந்த திருட்டுச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. கடைக்குள் புகுந்த கும்பல், முதலில் பாதாம் பால் பாட்டில்களை திருடி குடித்து விட்டு பின்னர் கொள்ளையடித்து சென்றது தெரியவர, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்