ஒரு ஆபரேஷன்.. உயிரிழந்த பெண்.. தாயை இழந்த 3 மாத குழந்தை.. மனைவியை இழந்து கதறும் கணவன்

x

ராமநாதபுரத்தில், குடும்பக் கட்டுப்பாடு செய்த இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மருதூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் மனைவி கீதாவிற்கு, 4 மாதங்களுக்கு முன்பு நயினார் கோயில் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் 2வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது அங்கு பணிபுரியும் செவிலியர் ஒருவர், கீதாவிடம் குடும்பக் கட்டுப்பாடு செய்யுறுமாறு கூறி வந்துள்ளார். அதன்படி, ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கபப்டட கீதாவிற்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை அளித்தபோது, அவருக்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அவசரமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கீதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளித்த தவறான சிகிச்சையாலேயே கீதா உயிரிழந்ததாகக் கூறி, உடலை வாங்க மறுத்து அக்கிராம மக்கள் ஏராளமானோர் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது..


Next Story

மேலும் செய்திகள்