வெளியே சென்று வீடு திரும்பாத இளைஞர்...வயலில் பிணமாக கிடந்த கொடூரம் - போராட்டத்தில் குதித்த மக்கள்

x

திருஉத்திரகோசமங்கை அருகே உள்ள சுமைதாங்கி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். மைக் செட் வாடகைக்கு விடும் கடை நடத்தி வந்த இவர், வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில், அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததனர். இந்த நிலையில், இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, கொலையாளிகளை பிடிக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் என உயிரிழந்த பாலமுருகனின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்