இறுதிச்சடங்குக்கு தயாரான நொடியில் திடீரென கண் திறந்து பார்த்ததால் அதிர்ச்சி.. தீயாய் பரவும் வீடியோ

x

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, இறந்ததாக கூறப்பட்ட இளைஞர் கண் திறந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னம்பட்டியைச் சேர்ந்த ஆண்டிநாயக்கர் என்பவர், குடும்ப பிரச்னை காரணமாக விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியதாக தெரிகிறது. ஆனால், ஆண்டிநாயக்கர் அசைவுற்று இருந்ததால், அவர் இறந்து விட்டதாக கருதி, உறவினர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். இதற்கிடையில், உறவினர்களின் அழுகுரலை கேட்ட இளைஞர், கண் திறந்து பார்த்ததால், அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆண்டிநாயக்கர் அனுப்பி வைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்