ஆட்டம்...பாட்டம்...குதூகலம்...தமிழகத்தில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்

x

நாகை அவுரி திடலில் திமுகவினர் சமத்துவ பொங்கலை கொண்டாடினர். முன்னதாக நாகூரில் இருந்து நாகை வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக வந்து வழிநெடுகிலும் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

புதுச்சேரி மாநில திமுக சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் சுமார் 300க்கும் பெண்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்தனர். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பறை இசை, தப்பாட்டம், உடுக்கை, பம்பை, கரகாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட கிராமிய இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன... தமிழக பகுதிகளில் மழை நிவாரணம் வழங்கப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரி அரசு வழங்கவில்லை என சிவா குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்