"குளிப்பதை எட்டி பார்க்கும் குடிகாரர்கள்"... கதறும் பெண்கள் - சென்னை அருகே பரபரப்பு

x

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே, குடியிருப்பு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் கைது செய்தனர். ஆரணி, கம்மாள தெருவில் செயல்படும் மதுபானக் கடையில், மது அருந்த வருபவர்களால் பெண்கள், மாணவர்கள், அலுவலகம் செல்வோருக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், மதுபோதையில் அடிக்கடி ரகளையில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்து வருவதாக தெரிகிறது. எனவே, குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சமாதான பேச்சுவார்த்தையை ஏற்காததால், போலீசார் அவர்களை கைது செய்தனர். முன்னதாக, போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்