நெல்லையை உலுக்கிய மரணம்... கடிதத்தில் முக்கிய புள்ளிகளின் பெயர்..? அ.மலை பகீர் `X' பதிவு

x

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த 30ஆம் தேதியே மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், ஜெயக்குமார் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். அந்த கடித‌த்தில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆனாலும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்த‌தாக தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். உடனடியாக ஜெயக்குமாரின் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரித்து, உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்