"நீட் தேர்வு வேண்டுமா?வேண்டாமா?" - விடாத காரசார வாக்குவாதம் - சமாதானம் செய்து வைத்த போலீசார்

x

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் சென்ற நிலையில் வெளியே காத்திருந்த பெற்றோர் நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என தங்களுக்குள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது...

நீட்டில் மெரிட்டில் தேர்ச்சி பெற்று மருத்துவராக வர வேண்டும் என்று ஒரு தரப்பினர் சொல்ல, மற்றொரு தரப்பு நீட் தேர்வுதான் வேண்டும் என்றால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எதற்கு என வாதம் செய்தனர்... மேலும் இருதரப்பும் தங்கள் தரப்பு நியாயங்களை அடுக்கடுக்காக முன்வைத்து சண்டையை வளர்த்துக் கொண்டிருந்தனர்... மாணவர்கள் அமைதியாக தேர்வு மையத்திற்குள் தேர்வெழுதிய சமயத்தில் பெற்றோர்கள் வெளியே வாக்குவாதம் செய்ததால் சலசலப்பு நிலவியது... இதையடுத்து அங்கு வந்த காவலர்கள் பெற்றோர்களை சமாதானம் செய்து வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்