அரசு மருத்துவமனையில் பூட்டியிருந்த கழிவறை... ஊழியர்களை எச்சரித்த ஆட்சியர்

x

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பு அறை மற்றும் கழிவறை பூட்டப்பட்டிருந்ததால் ஆட்சியர் அரசு மருத்துவமனை ஊழியர்களைக் கடிந்து கொண்டார்.

திருச்செங்கோடு சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு நிகழ்ச்சிக்காக வந்த ஆட்சியர் உமா மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கழிவறை, காத்திருப்பு அறை ஆகியன திறக்கப்படாமல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மருத்துவர்களிடம் கடிந்து கொண்டார். மேலும், காத்திருப்பு அறையில் நோயாளிகளின் பழைய படுக்கைகளை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து விட்டுச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்