மேயரை கார் கொண்டு இடிக்க வந்த காங். கவுன்சிலர்..குமரியில் அதிர்ச்சி

x

நாகர்கோவில் மாநகராட்சி மேயருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள காங்கிரஸ் கவுன்சிலரை தேடி வருகின்றனர்.நாகர்கோவில் மாநகராட்சி மேயராக உள்ள தி.மு.க.வை சேர்ந்த மகேசுக்கு எதிராக, காங்கிரஸ் 44-வது வார்டு கவுன்சிலர் நவீன் செயல்படுவதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மேயரின் வாகனத்தை நவீன் கார் மூலம் இடிக்க வந்ததாகவும், அதுகுறித்து உதவியாளர் கேட்டபோது, கொலை செய்து விடுவதாக கூறி கத்தியை காட்டி மிரட்டியதாகவும், நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில், சம்பவ இடத்தில் சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கவுன்சிலர் நவீன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்