போலீஸுடன் தகாத உறவு?..கல்யாணமான 2வது நாளே கர்ப்பம்? -நாகையை பரபரப்பாக்கிய பெண்
நாகையில், காவலர் ஒருவர் தன்னை கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றியதாக திருமணமான பெண் ஒருவர் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் பெரியதும்பூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சுகன்யா. இவரும் பக்கத்து தெருவை சேர்ந்த காவலர் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரத்தை அறிந்த சுகன்யாவின் வீட்டார்... அவருக்கு புதுபள்ளியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்து வைத்த நிலையில், திருமணத்திற்கு பிறகும் காவலருடன் சுகன்யா தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், சுகன்யா கர்ப்பம் தரித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால், குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு கணவரை பிரிந்த சுகன்யாவை, திருமணம் செய்து கொள்வதாக கூறி காவலர் பழகி வந்ததாகவும், பின்னர் திடீரென பின்வாங்கி அவரை விரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், காவலருடன் நெருக்கமாக இருந்த புகைப்பட ஆதாரத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த சுகன்யா, பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.