மதுரையில் தங்கம் வைர நகைகள் பறிமுதல்-6 நாட்களாகியும் உரிய ஆவணங்கள் இல்லாததால் இறுதியில் நடந்த செயல்

x

மதுரையில் பறக்கும் படை பறிமுதல் செய்த 29 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மதுரை விமான நிலையம் அருகே 17 ஆம் தேதி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 18 கோடி ரூபாய் மதிப்புள்ள 29 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், 6 நாட்களாகியும், ஆவணங்களை சமர்பிக்க நகைக்கடை முன்வரவில்லை. இதனால், கருவூலத்தில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகள், பலத்த்த பாதுகாப்புடன் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்