நேருக்கு நேர் மோதிய கார்... சுற்றி வளைத்து வீசிய பெட்ரோல் குண்டு - மதுரையை நடுங்க வைத்த சம்பவம்

x

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த மருது சேனை அமைப்பின் நிறுவன தலைவர் ஆதிநாராயணன் என்பவர், தனது அலுவலகத்தில் இருந்து கள்ளிக்குடி - விருதுநகர் நான்கு வழி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார் அப்போது, மையிட்டான்பட்டியில் இருந்து எதிர் திசையில் கார் ஒன்று ஆதி நாராயணன் கார் மீது மோதியது. தொடர்ந்து காரில் வந்த கும்பல், அவர் மீது பெட்ரோல் குண்டு வீசியது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். அதனைத் தொடர்ந்து, ஆதிநாராயணனை கொல்ல வந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த போலீசார், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனை மேற்கொண்டனர். இதனிடையே, ஆதிநாராயணன் மீது பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயன்ற நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்திதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்