"அன்று ஒரு நாள் மட்டும் அலட்சியமாக இருக்காமல் அனைவரும் முன்வர வேண்டும்" - ராதாகிருஷ்ணன்

x

வாக்குப்பதிவு அன்று விடுமுறைதானே என அலட்சியமாக இருக்காமல் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற முன்வர வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,கலந்து கொண்டு பேசிய சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராதாகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் கூட ஆர்வமுடன் வாக்களிக்க வந்துவிடுகிறார்கள். அதேபோல, விடுமுறைதானே என அலட்சியமாக இருக்காமல் அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்