"நியாயம் கிடைக்காவிடில் உயிரை விடுவதுதான் இறுதி முடிவு" மனைவி எடுத்த விபரீத முடிவு - கன்னியாகுமரி அருகே பரபரப்பு

x

தக்கலை பகுதியை சேர்ந்த ரெனி என்பவருக்கு, நாகர்கோவிலை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணம் நடந்து ஒரு குழந்தை உள்ளது. இதனிடையே, ரெனிக்கு மற்றொரு குழந்தை தகாத முறையில் பிறந்ததாகக் கூறி, அவரது கணவர் ரெனியின் கையெழுத்து இல்லாமலேயே விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், ரெனியின் குழந்தையை கணவர் அழைத்துச் சென்று மறைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், எங்கு சென்றும் நியாயம் கிடைக்காததால், ஆட்சியர் அலுவலக வாயிலில் தனது மற்றொரு பிள்ளையுடன் நின்றபடி அழுது கொண்டிருந்தார். தனக்கு நியாயம் கிடைக்காத நிலையில் உயிரை விடுவது தவிர வேறு வழியில்லை எனக் கூறிய ரெனி, போக்குவரத்து மிகுந்த சாலையில் திடீரென குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரை அங்கிருந்த போலீசார் பாதுகாப்பாக மீட்டு சமாதானப்படுத்தினர். மேலும், இவரைப் போலவே கணவனால் பாதிக்கப்பட்ட மற்றொரு இளம்பெண்ணும், ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்