கலெக்டர் ஆபிஸில் அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த சம்பவம்..மதுரையில் பரபரப்பு | Madurai

x

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடக்கு தாலுகாவிற்கு சொந்தமான குடோனில், பொங்கல் பண்டிகையை ஒட்டி வழங்குவதற்காக 12 ஆயிரத்து 500 இலவச வேட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கூடுதலாக வந்த வேட்டிகளை வைப்பதற்காக குடோனை திறக்க முயற்சித்த போது, பூட்டு மாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதனை உடைத்து உள்ளே சென்ற வருவாய் துறை அதிகாரிகள், இலவச வேட்டிகள் முழுவதும் கொள்ளையடிக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இலவச வேட்டி, சேலைகள் வைக்கப்பட்ட குடோனில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்