விடாது பெய்யும் மழை... சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2வது நாளாக பெய்து வரும் பலத்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது... சங்கரன்கோவில் முதல் சுரண்டை செல்லும் சாலையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கிய நிலையில் வாகனங்கள் மிதந்து செல்கின்றன... அப்பகுதியில் அனைத்து குளங்களும் நிரம்பியதால் ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது... வீடுகளுக்குள் நுழைந்த மழை நீரால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம், நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் மழை நீரில் மூழ்கிய நிலையில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இருமன்குளத்திலும் வீடுகளைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் உருவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்