"40 தொகுதிகளில்.."- பேச்சுவார்த்தை முடிந்ததும் கே.எஸ்.அழகிரி பேட்டி

x

திமுகவுடன் நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக-காங்கிரஸ் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தரப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல், திமுக தரப்பில் எம்.பி. டி.ஆர்.பாலு, அமைச்சர் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும், 40 தொகுதிகளில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பது குறித்து பேசியதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்