கிட்ட வந்த.. ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. | TN | Train

x

சென்னை - நெல்லை இடையே டெல்டா மாவட்டங்கள் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி - சென்னை சிறப்பு ரயில், வரும் 9, 16, 23 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை - திருநெல்வேலி சிறப்பு ரயில், வரும் 10, 17, 24 ஆகிய தேதிகளில், சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு நெல்லை சென்றடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூர் வழியாக மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய பகுதிகளை கடந்து சென்னை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்