#JUSTIN || நெல்லையில் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு.. நடத்துநருக்கும் நேர்ந்த கதி

x

அம்பை அருகே பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு - மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து நெல்லை நோக்கி சென்ற அரசு பேருந்தை ரெஜி என்பவர் ஓட்டி சென்றார். கண்ணன் என்பவர் நடத்துனராக பணியில் இருந்தார். அம்பை அடுத்த கல்லிடைக்குறிச்சி பகுதியில் பேருந்து சென்ற போது திடீரென பைக்கில் வந்த மூன்று பேர் பேருந்தை வழிமறித்துள்ளனர்.

தொடர்ந்து பைக்கை ஓட்டி வந்த மர்ம நபர் தன்னுடன் வந்த இருவரை பேருந்தில் ஏற்றி விட்டுள்ளார். அப்போது ஓட்டுனர் ரெஜி மற்றும் நடத்துனர் கண்ணன் இருவரும் அந்த நபர்களை சத்தம் போட்டதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பைக்கை ஓட்டி சென்ற அந்த மர்ம நபர் பைக்கில் கொலைவெறியோடு பேருந்தை பின்தொடர்ந்துள்ளார். வீரவநல்லூர் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றவுடன் அங்கு பைக்கில் வந்த அந்த மர்ம நபர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் ஓட்டுனர் ரெஜியின் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரெஜியின் இடது கண்ணத்தில் தொடங்கி மூக்கு வரை பலத்த வெட்டு விழுந்துள்ளது. இதை தடுக்க சென்ற நடத்துனர் கண்ணனுக்கும் லேசான வெட்டு விழுந்துள்ளது.

பின்னர் பேருந்தில் ஏறியிருந்த இரண்டு நபர்களை மீண்டும் பைக்கில் ஏற்றி கொண்டு ஓட்டுனரை வெட்டிய மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற வீரவநல்லூர் போலீசார் ஓட்டுனர் நடத்துனர் இருவரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஓட்டுனர் ரெஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள வீரவநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்