கள்ளக்காதல் மோகம்..கணவரை பிரிந்த பெண்-தனியாக தவித்த பிஞ்சு குழந்தைகள்..மனைவியை கடத்திய உறவினர்கள்

x

#thanthitv #crime #kidnapping

கள்ளக்காதல் மோகம்..கணவரை பிரிந்த பெண்-தனியாக தவித்த பிஞ்சு குழந்தைகள்..மனைவியை கடத்திய உறவினர்கள்

திருப்பத்தூர் அருகே, கணவரை பிரிந்து தகாத உறவு காதலனுடன் பெண் சென்ற விவகாரத்தில், கணவரின் உறவினர்கள் காவல்நிலையம் முன் தீக்குளிக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சுண்ணாம்புகாளை புதூர் பகுதியை சேர்ந்தவர் விமல். இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்த நிலையில், அப்பெண் தன் இரு குழந்தைகள் மற்றும் கணவரை விட்டுப் பிரிந்து விமலுடன் குடித்தனம் நடத்த சென்றது பெண்ணின் உறவினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனிடையே தகாத உறவு காதலனை விட்டு வர மறுத்த அப்பெண், கணவரிடம் விவாகரத்து பெற முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விவகாரத்து பெறுவது குறித்து திருப்பத்தூரில் உள்ள தனியார் ஹோட்டலில், வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த பெண்ணை அவரது உறவினர்கள் கடத்திச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்