"10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு".. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்

x

10 ,11 ,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இருக்காது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்களுக்கான 'நலம் நாடி' செயலியை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். தொடர்ந்து, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையவழி குறைதீர்புலம் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் இருக்காது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்