உயிரோடு நிற்கவைத்து தீ வைத்த மகன்.. எரியும் உடலோடு துடித்து ஓடிய சித்தப்பா - பதறவைக்கும் காட்சி

x

உயிரோடு நிற்கவைத்து தீ வைத்த மகன்

எரியும் உடலோடு துடித்து ஓடிய சித்தப்பா

தீ தணியும் போது செய்ததுதான் கொடூரத்தின் உச்சம்

கிருஷ்ணகிரி அருகே சொந்த சித்தப்பா என்றும் பார்க்காமல், இளைஞர் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

நிலப் பிரச்சினையால்.. குடும்பத்துக்குள் ஏற்பட்ட மோதலின் உச்சமே இந்த கொடூர சம்பவம்...

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர், சின்னவன்... இவரது அண்ணன் மகன் செந்தில், நிலப் பிரச்சினை காரணமாக, அண்மைக் காலமாகவே வன்மத்துடன் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தான், சம்பவத்தன்று காவேரிப்பட்டினத்தில் உள்ள தனது கடையில் இருந்த சின்னவனை நோட்டமிட்டு வந்திருக்கிறார், செந்தில்...

அப்போது, சற்றும் எதிர்பாராத வகையில், பாத்திரத்தில் தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை சித்தப்பா மீது ஊற்றிய செந்தில், தீயை பற்ற வைக்க முயன்றார்...

அதிர்ந்து போன சின்னவன், உயிரை கையில் பிடித்துக் கொண்டு அண்ணன் மகனுடன் மல்லுக்கட்டிய நிலையில், அங்கிருந்தவர்களும் செந்திலை தடுக்க முயன்றனர்.

அவர்களது முயற்சி சற்றும் பலனளிக்காததால், விஷயம் கைமீறிப் போனது...

உடல் முழுதும் தீ பற்றி எரிந்தபடி, சின்னவன் துடித்துக் கொண்டிருக்க... பாக்கெட்டில் நிரப்பி கொண்டு வந்திருந்த எஞ்சிய பெட்ரோலையும் அவர் மீது செந்தில் வீசியது கொடூரத்தின் உச்சம்...

மனதை பதற வைக்கும் இந்த சம்பவத்தில், 70 சதவீத தீக்காயத்துடன் முதியவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது அண்ணன் மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்