"பொய்யான தகவல்..பக்தர்கள் ஏமாற வேண்டாம்" - பழனி கோயில் நிர்வாகம்

x

பழனி முருகன் கோவிலில் உங்களுடைய பெயர் நட்சத்திரம் சொல்லி ஆடி கிருத்திகை என்று ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்ய உள்ளதாக கூறி பணம் பறிக்கும் கும்பல்.

அவ்வாறு பொய்யான தகவல்களை உருவாக்கியவர்கள் மீது காவல்துறை சைபர் குற்ற தடுப்பு பிரிவு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள புகார் குழு நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.

பழனி கோவில் நிர்வாகம் இது போன்று தொலைபேசி மற்றும் அர்ச்சனைசை ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளவே இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆகையால் பக்தர்கள் எந்தவித குறுஞ்செய்தி மற்றும் அறிவிப்பு எதனையும் நம்பி பணம் கட்டி ஏமாற வேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்