பெரியார் சிலையை உடைத்த நபர்..பரபரப்பு வாக்குமூலம் கொந்தளிப்பில் அதிமுகவினர் - பெரம்பலூரில் பரபரப்பு

x

பெரம்பலூரில் பெரியாரின் சிலையை சேதப்படுத்தி கைதான நபர், பெரியாரை தனக்கு பிடிக்கும் எனவும், தான் சிலையின் கட்டை விரலை பிடித்து எழவே முயன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

vovt

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், அதிமுக சார்பாக அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை மீது, சிவப்பு சால்வை போடப்பட்டிருந்தது. சிலையின் கைவிரல் சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து அதிமுகவினர், சிலையை சேதப்படுத்தியவரை கைது கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தநிலையில், பெரியார் சிலையை சேதப்படுத்திய அனுச்சந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாயுடன் ஏற்பட்ட தகராறால் மது அருந்திவிட்டு பெரியார் சிலையில் படுத்ததாகவும், பெரியார் மீது உள்ள பாசத்தால் சிவப்பு சால்வை அணிவித்ததாகவும் கூறியுள்ளார். மேலும், பெரியார் சிலையின் கட்டை விரலை பிடித்து, தான் எழவே முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்