அமைச்சர் துரைமுருகன் சொன்ன முக்கிய அப்டேட்

x

அமைச்சர் துரைமுருகன் தலைமையில், நீர்வளத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், எதிர்வரும் பருவமழைக்கும் முன்னர் காவிரி படுகை கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை விரைந்து செயல்படுத்திடவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், வரும் நிதியாண்டில் செயல்படுத்தவிருக்கும் பல்வேறு திட்ட பணிகள், நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவிருக்கும் திட்ட பணிகள், புதிய அறிவிப்புகளை வெளியிடுவது தொடர்பாகவும் அமைச்சர் துரைமுருகன் சில ஆலோசனைகளை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்