பிரியாணி சாப்பிட்டு விட்டு ரூ.20 கடன் - கெட்ட வார்த்தையால் திட்டிய ஓனர் -மன உளைச்சலில் விபரீதமுடிவு

x

விருத்தாச்சலம் ஜங்ஷன் சாலையில் உள்ள மாணிக்கவாசகர் நகர் பகுதியில் வசிக்கும் லண்டன் துரைராஜ் என்பவர், அதே பகுதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு எதிரே உள்ள பிரியாணி கடையில், துரைராஜ் பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதில் 20 ரூபாய் பணம் குறைவான இருந்ததால், கடை உரிமையாளரிடம் துரைராஜ் பின்னர் தருவதாகக் கூறியுள்ளார். அப்போது, கடையின் உரிமையாளர் ரமணன் என்பவர், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த துரைராஜ், பிரியாணி கடை எதிரே, உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்த நிலையில், 90 சதவீத தீக்காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த துரைராஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்