பிரியாணிக்காக குவிந்த கட்டுக்கடங்கா கூட்டம்... விரட்டியடித்த போலீசார் கோவையில் பரபரப்பு

x

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு பிரியாணி கடை முன் குவிந்த கூட்டத்தை போலீசார் விரட்டி அனுப்பினர். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோவை வாலாங்குளம் பகுதியில் கண்கவர் லேசர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை காண ஏராளமானவர்கள் குவிந்த நிலையில், நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரியாணி சாப்பிட கடை முன் குவிந்தனர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்த நிலையில் தடியை காட்டி மிரட்டி போலீசார் விரட்டி அனுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்