ஆபாச படத்திற்கு ஃபைன்.. கல்லூரி மாணவர்களின் தில்லாலங்கடி வேலை.. கோவையில் பரபரப்பு

x

செல்போன் செயலி மூலம் போலீஸ் எனக்கூறி மிரட்டி பணம் பறித்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் கூண்டோடு கைது செய்தனர்.

கோவை மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த சிலரிடம் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக கூறி மிரட்டி பணம் பறித்ததாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கும்பல் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து மாணவர்கள் 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோகுலம் காலணியை சேர்ந்த பெனி மகன் சபரி என்பவர் மாணவர்களை தவறாக வழிநடத்தியதுடன், அவர்களுக்கு செல்போனில் புதிய செயலிலை பதிவிறக்கம் செய்து மிரட்டி பணம் பறிக்க கற்று கொடுத்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரையும் கைது செய்த போலீசார் 9 பேரையும் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்