கல்லூரி மாணவி விபரீத முடிவு | காதலால் வந்த வினை

x

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி. பாரிமுனையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த கிருஷ்ணகுமாரி, கொளத்தூர் ஜிகேஎம் காலனியை சேர்ந்த விக்கி என்ற இளைஞரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விக்கியுடன் பழகுவதை கிருஷ்ணகுமாரி நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்கி, தன்னிடம் பேசவில்லை என்றால், இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்களை குடும்பத்தாரிடம் காட்டி விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த இளம்பெண், கடந்த 2ஆம் தேதி வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து குதித்ததில் படுகாயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தற்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்