பேருந்தின் முன் பாய்ந்து த*கொலை செய்த நபர்.. சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி

x

சாலையில் நின்றிருந்த நபர் திடீரென அந்த வழியாக வந்த தனியார் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சாய்பாபா காலணி பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர், மனநலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, ஆனந்தை அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பேருந்து முன்பு, ஆனந்த் திடீரென பாய்ந்தார். இதில், பேருந்தின் முன் சக்கரம் ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தின் முன் பாய்ந்து த*கொலை செய்த நபர்.. சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி


Next Story

மேலும் செய்திகள்