ரகசிய கூட்டு ஓரினச்சேர்க்கையில் காவலர்.. போதையில் சைக்கோவாக மாறிய நண்பர்கள்.. ரவுண்டு கட்டிய போலீஸ்.. விசாரணையில் அதிர்ச்சி

x

சென்னை, திருமுல்லைவாயலை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். காவலரான இவர், ஓரினச்சேர்க்கைக்கு அடிமையாகி... அது தொடர்பான செயலி ஒன்றையும் செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இளைஞர் ஒருவரை தன் காவலர் குடியிருப்புக்கு அழைத்த அப்துல் ரஹீம், தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அந்த இளைஞருடன் கூட்டு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருக்கிறார். இதில், கஞ்சா போதையில் இருந்த அப்துல் ரஹீம் மற்றும் அவரது நண்பர்கள், ஒரு கட்டத்தில் இளைஞரை துரத்தி துரத்தி தாக்கியதாகவும், அவர் அணிந்திருந்த மூன்றரை சவரன் நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், காவலர் அப்துல் ரஹ்மான் மற்றும் அதே காவலர் குடியிருப்பை சேர்ந்த காவலர் ஒருவரின் மகனான சரண்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த நிலையில், தொடர்ந்து தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்