நள்ளிரவில் ரத்தத்தில் நடுங்கிய சென்னை... சாதி மாற்றி திருமணம் செய்த இளைஞரை வெட்டிய பெண்ணின் அண்ணன்

x

பள்ளிக்கரணையை சேர்ந்த கூலித் தொழிலாளி பிரவீன் 4 மாதங்களுக்கு முன்பு ஜல்லடியன்பேட்டையை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் குடும்பத்தார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று இரவு பிரவீன் பள்ளிக்கரணையில் உள்ள டாஸ்மாக் ஒன்றில் மது அருந்தச் சென்று விட்டு வெளியில் வந்த போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பினர்... உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிரவீனை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில், பெண்ணின் அண்ணன் தினேஷ் நண்பர்களுடன் சேர்ந்து பிரவீனை கொன்றது தெரியவந்தது. இந்நிலையில் தினேஷ், அவரது நண்பர்களான விஷ்ணுராஜ், ஸ்ரீராம், தினேஷ், ஜோதி லிங்கம், ஸ்டீபன் குமார் ஆகியோரை கைது செய்தனர். எஸ்.சி/எஸ்.டி என்ற பிரிவின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது... கொலையான பிரவீன் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்