இறப்பதற்கு சில நிமிடங்கள் முன் கடவுள் கொடுத்த எச்சரிக்கை..நொடியில் பிரிந்த உயிர் -கதறும் தாய், அக்கா

x

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர்கள் முனிவேல் - கவுரி தம்பதியின் மூத்த மகன் கிரண் ராஜ், ஐடிஐ முடித்துவிட்டு, தற்காலிகமாக ஒரு நிறுவனத்தில் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். ரீல்ஸ் எடுப்பதில் அதீத விருப்பம் கொண்ட கிரண் ராஜ், ரீல்ஸ் எடுப்பதற்காக தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து, எண்ணூரில் உள்ள குட்டைப் பகுதிக்கு சென்றுள்ளார். அந்த குட்டையானது சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து சுடுதண்ணீர் கடலுக்குள் செல்ல அமைக்கப்பட்டிருந்த பாதையாக முன்பு இருந்ததாக கூறப்படுகிறது. பராமரிப்பில்லாத இந்த குட்டையின் அருகே இளைஞர்கள் ஆரவாரமாக ரீல்ஸ் எடுத்து குட்டையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற ஒருவர், குட்டையில் விளையாட வேண்டாம் என வெளியேறுங்கள் என எச்சரிக்க, அவரை போலீஸ் என நினைத்த கிரண்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள், அங்கிருந்து வேகவேமாக தப்பியோடியுள்ளனர். ஆனால், சிறிது தூரம் கழித்து திரும்பி பார்த்தபோது, கிரண்ராஜ் காணாததால், நண்பர்கள் மீண்டும் அந்த குட்டைக்கு சென்று தேடியுள்ளனர். அப்போது, குட்டையில் கிரண்ராஜ் பரிதாபமாக நீரில் மூழ்கி சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்