லேடீஸ் ஹாஸ்டல் குப்பையில் பச்சிளம் குழந்தை... கடித்த எறும்புகள் - மரணத்தை வென்ற `அதிர்ஷ்டலட்சுமி'

x

இந்த வளாகத்தின் கழிவு நீர் செல்லும் பைப் லைன்களுக்கு இடையே, பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 2 நாட்களாக அழுத நிலையில், எறும்புகள் கடித்தபடி காயங்களுடன் இருந்த குழந்தையை விடுதியின் உரிமையாளர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, பூந்தமல்லி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட மகளிர் விடுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும் பச்சிளங்குழந்தையை விடுதியின் பின்புறம் வீசிச் சென்றது யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு மருத்துமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததால் குழந்தைக்கு 'அதிர்ஷ்டலட்சுமி' என பெயர் வைத்துள்ளதாக குழந்தையை காப்பாற்றிய விடுதி உரிமையாளர் யுவராணி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்