ஓசி பிரியாணி, மாமூல் கேட்டு டார்ச்சர்...சென்னையில் நடந்த பகீர் சம்பவம் - வேளச்சேரி டான்-க்கு போலீஸ் வைத்த செக்

x

இலவச பிரியாணி மற்றும் மாமூல் கேட்டு தராததால் சென்னை ஆழ்வார்பேட்டையில் பிரியாணி கடையை சூறையாடிய கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜிம் பயிற்சியாளர் சதீஷ் குமார். இவர் ஆழ்வார்ப்பேட்டை டிடிகே சாலையில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு தினமும் வேளச்சேரியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாட்டில் மணி என்பவர் வந்து இலவச பிரியாணி மற்றும் மாமூல் கேட்டு மிரட்டி வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில், கடந்த 11ம் தேதியும் அதேபோல் மாமுல் கேட்டதுடன் கடையில் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது... சதீஷ் போலீசில் புகாரளித்த நிலையில், இது தொடர்பாக பாட்டில் மணிக்கு தகவல் தெரிய வந்துள்ளது... உடனே அவர் தனது கூட்டாளிகள் 6 பேருடன் சேர்ந்து நேற்று இரவு ஆட்டோவில் வந்து சதீஷூக்கு கொலை மிரட்டல் விடுவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாட்டில் மணி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரியாணி கடையை சூறையாடி 50ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை அடித்து நொறுக்கி ஊழியரை தாக்கிவிட்டு சென்றதாக வேதனையுடன் கடை உரிமையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.... அவர் மீண்டும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள நிலையில், தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்