காது கூச அசிங்கமாக பெண்ணை திட்டிய கண்டக்டர். காதை கிழித்த 4 இளைஞர்கள்.. பஸ் திரும்பி வரும் வரை காத்திருந்து சம்பவம்

x

வரகனேரி சூளைக்கரை மாரியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டிய அப்பெண்ணை சற்று தூரம் தள்ளி இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண்ணிற்கும் நடத்துநருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்த நிலையில், நடத்துநர் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது... அதன்பின், மீண்டும் அவ்வழியே பேருந்து வந்த போது சூளைக்கரை பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த 5 பேர் கொண்ட கும்பல் பேருந்தில் ஏறி எப்படி ஒரு பெண்ணை திட்டலாம் என்று கூறி, மாத்தூரை சேர்ந்த நடத்துனர் மூக்கையனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இக்காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்த நிலையில், இந்த காட்சிகள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன... நடத்துனர் மூக்கையன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்