#Breaking||பல்லடம் படுகொலை.. டிஜிபி ஆபிஸிலிருந்து பறக்கும் கமெண்ட்கள்..திருப்பூரில் தேடி தேடி வேட்டை

x

பல்லடத்தில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வரும் போலீசார்

ஐந்து தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி கொலையாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மீதமுள்ளவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்

பல்லடத்தில் மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி டிஐஜி சரவண சுந்தர், ஈரோடு எஸ் பி, நாமக்கல் எஸ்பி, உள்ளிட்ட அதிகாரிகள் தலைமை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது

கொலை செய்யப்பட்ட செந்தில்குமாரிடம் வெங்கடேசன் என்பவர் மூன்று வருடங்களுக்கு முன்பாக ஓட்டுனராக பணிபுரிந்ததும் அதன் பின்பாக அவரது நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அவர் அந்த பணியில் இருந்து நிறுத்தப்பட்டு இருக்கிறார்

பின்னர் செந்தில்குமாரின் சகோதரர் மோகன் ராஜிடம் வெங்கடேசன் பணம் கொடுக்கல் வாங்கல் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்து.

சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இருந்து பல்லடத்தில் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்