BREAKING || அஜித் உடல்நிலை... ரசிகர்களுக்கு நிம்மதி செய்தி

x

நடிகர் அஜித்குமார் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், காதுக்கு கீழ் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பு ஒன்றில் வீக்கம் இருந்ததாகவும் இதனால் அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வந்த நடிகர் அஜித்குமார் இன்று அதிகாலையில் வீடு திரும்பியுள்ளார்.

மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த நடிகர் அஜித்தை நேற்று பல திரைப்பட இயக்குனர்கள் நேரில் வந்து நலம் விசாரித்ததாகவும் அவர்களுடன் நடிகர் அஜித் பேசி மகிழ்ந்ததாகவும், அதனால் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் சுரேஷ் சந்திரா விளக்கம் தெரிவித்தார்.

மூளையில் கட்டி ,தொடர்ந்து ஐசியு-வில் கண்காணிப்பு, படப்பிடிப்புகள் ரத்து,மூன்று மாதம் ஓய்வு என எந்த வதந்தியும் நம்ப வேண்டாம் எனவும்

அதேபோல் அடுத்த வாரம் வெளிநாட்டில் நடக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் கண்டிப்பாக செல்வார் எனவும் தகவல் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்